Sunday, February 7, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 7 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 7 ]

அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley]

ஹாரி அடுத்த நாள் காலை கண்விழித்தான். சூரிய வெளிச்சம் அவன் கண்ணில் பட்டது. அவன் கண்ணை இறுக மூடி கொண்டான்.

"இது வெறும் கனவு தான்,", தன்னிடம் கூறி கொண்டான். "ஹாக்ரிட் என்ற ஒருவர் வந்து என்னிடம் நீ சூனியகாரர்களின் பள்ளியில் படிக்க போகிறாய் என்று கூறியதாக நான் கனவு கண்டேன். என் கண்ணை திறக்கும் போது நான் மறுபடியும் பழைய கப்போர்டில் தூங்கி கொண்டிருப்பேன்", என்று நினைத்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது பெட்டுனியா தான். ஹாரி கண்ணை திறக்க வில்லை. அது ஒரு நல்ல கனவாக இருந்தது. அதை விட்டு வெளியே வர அவனுக்கு விருப்பம் இல்லை.

"டப் டப் டப்", மீண்டும் கதவு தட்டும் சத்தம்.

சரி சரி நான் எழுந்திருக்கிறேன் என்றான் ஹாரி.

ஹாரி எழுந்து உக்கார்ந்ததும் கீழே ஹாக்ரிட் கருப்பு மேலங்கி இருப்பதை கவனித்தான். ஹாக்ரிட் அங்குள்ள சோபாவில் தூங்கி கொண்டு இருந்தார். ஜன்னலுக்கு வெளியே ஒரு ஆந்தை ஒன்று செய்திதாளுடன் உள்ளே வர முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஹாரி சென்று ஜன்னல் கதவை திறந்தான். ஆந்தை உள்ளே வந்து செய்தித்தாளை ஹாக்ரிட் மேல் போட்டது. அப்போதும் ஹாக்ரிட் எழுதிரிக்கவில்லை. ஆந்தை நேராக சென்று ஹாக்ரிடின் கீழே கிடந்த கோட்டை கொத்த ஆரம்பித்தது.

ஹாரி அந்த ஆந்தையை துரத்த முயற்சி செய்தான். ஆனால் அது தொடர்ந்து கோட்டை கொத்தி கொண்டு இருந்தது.

"ஹாக்ரிட்", என்று கத்தினான் ஹாரி. "இந்த ஆந்தை"....

காசு கொடு அதற்க்கு என்றார் ஹாக்ரிட்.

என்ன?

ஆந்தைக்கு செய்தித்தாளை கொண்டு வந்ததிற்கு காசு கொடுக்க வேண்டும். என்னுடைய கோட் பாக்கெட்டில் பார் என்றார். அதில் உள்ள மற்ற பொருட்களுடன் சில நாணயங்களும் இருந்தது அது வித்தியாசமாகவும் இருந்தது.

அதற்க்கு ஐந்து நட்ஸ்[knuts] கொடு ஹாரி என்று ஹாக்ரிட் தூங்கி கொண்டே கூறினார்.

"நட்ஸ்?"

அந்த சிறிய வெண்கல நாணயங்கள்.

ஹாரி ஐந்து நாணயங்கள் எண்ணி கொடுத்தான். அந்த ஆந்தை அதன் காலில் அதை வாங்கி தன் சிறிய பையில் போட்டு கொண்டு மீண்டும் பறந்து சென்றது.

ஹாக்ரிட் கொட்டாவி விட்டு கொண்டு, "இன்று உனக்கு புத்தகங்கள் லண்டன் சென்று வாங்க வேண்டும் என்றார்".

"ஹாக்ரிட் என்னிடம் பணம் இல்லை, என் சித்தப்பாவும் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்", என்று கூறினான் ஹாரி.

"அதை பற்றி கவலை பட வேண்டாம்", என்றார் ஹாக்ரிட். உன் பெற்றோர் உனக்காக எதையும் விட்டுவிட்டு போகவில்லை என்று நினைத்தாயா...என்றார்.

ஆனால் வீடு அழிந்து விட்டது என்றீர்களே....

அவர்கள் வீட்டில் தங்கத்தை வைக்க வில்லை. முதலில் நாம் கிரிங்காட்ஸ், சூனியகாரர்களின் வங்கிக்கு நாம் செல்ல வேண்டும் என்றார்.

சூனியகாரர்களுக்கு வங்கியும் இருக்கிறதா என்றான் ஹாரி.

ஒன்றே ஒன்று இருக்கிறது. கிரிங்காட்ஸ், காப்ளின் நடத்துகிறார்கள்.

காப்ளின்ஸ்?

ஆமாம், அவர்களிடம் இருந்து எதையாவது திருட முயற்சி செய்தால் அவர்கள் மிக பொல்லதவதர்லாக மாறிவிடுவார்கள். எப்போதும் காப்ளின்சிடம் விரோதம் வைத்து கொள்ளாதே ஹாரி. கிரிங்காட்ஸ் மிக பாதுகாப்பான இடம் பொருட்களை வைப்பதற்கு. நானும் அங்கு செல்ல வேண்டும், டம்பில்டோருக்காக, ஹாக்வாட்ஸ் வேலை. அங்கு இருக்கிற முக முக்கிய பொருளை எடுத்து வர வேண்டும். அவர் முக முக்கியமான இந்த விசயங்களில் என்னை நம்புவார் என்ன பெருமையாக கூறி கொண்டார்.

No comments:

Post a Comment

Visitors