Saturday, February 6, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 5]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 5 ]

அத்தியாயம் 4 : ரகசியங்களின் பாதுகாவலர்

பூம்... கதவு மீண்டும் தட்டப்பட்டது. டட்லி அதிரிந்து எழுந்தான். வெர்னான் மற்றும் அவர் மனைவியும் அந்த அறைக்கு வந்தனர். அவர் கையில் நீண்ட ரைபில் இருந்தது.

யார் அது என்றார் வெர்னான். நான் உன்னை எச்சரிக்கிறேன் , என் கையில் துப்பாக்கி உள்ளது, என்றார் வெர்னான்.

ஒரு சிறிய அமைதி. அதன் பின்...

"டமால்".

கடவு உடைந்து உள்ளே தரையில் விழுந்தது. மிக பெரிய ஒரு உருவம் ஒன்று அவர்களின் கதவு இருந்த இடத்தில் இருந்தது. அந்த உருவத்தின் முகம் பெரும்பாலும் நீண்டு வளர்ந்து இருந்த தலை முடினாலும், அவரது தாடியினாலும் மறைந்து இருந்தது.

அவர் அந்த அறைக்குள் வந்த போது அவர் தலை அந்த கூரையை தட்டியது. அவர் கிட்டத்தட்ட 9 அடி உயரம் இருந்தார். அவர் உள்ளே வந்து, கீழே விழுந்து கிடந்த கதவை எளிதாக எடுத்து மீண்டும் அது இருந்த இடத்தில் நிறுத்தினார். அப்போது புயல் சற்று ஓயிந்து இருந்தது. அவர் திரும்பி மற்றவர்களை பார்த்தார்.

"ஒரு டீ தயார் பண்ணி தரமாட்டீர்களா, இது மிக எளிதான பயணம் அல்ல ", என்று கூறினார்.

அவர் அங்கு சோபாவில் பயத்தில் உறைந்து போய் உக்கார்ந்திருந்த டட்லியின் அருகில் சென்று அமர்ந்தார்.

"ம்ம் சீக்கிரமா தயார் செய்யுடா புளிமூட்டை" என்று வேர்நானை பார்த்து கூறினார் புதிதாக வந்தவர்.

டட்லி சிறிதாக அலறல் எழுப்பி கொண்டு தன் தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான். அவன் தாய் வெர்னான் பின்னல் மறைந்து நின்று கொண்டு இருந்தாள்.

பின்னர் அவர் ஹாரியை நோக்கி, " ஆ, ஹாரி இங்கே இருக்கிறாயா?", என்றான் அந்த பெரிய உருவம் உடையவன்.

போன தடவை நான் உன்னை பார்த்த போது நீ சிறிய குழந்தையாக இருந்தாய், இப்போது வளர்ந்து விட்டாய், என்றார்.

வெர்னான் தன் தொண்டையை சரி செய்து கொண்டு, 'சார், நீங்கள் இப்போது வெளியே செல்லுங்கள், நீங்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்துள்ளீர்கள்", என்றார்.

"வாயை மூடு, டர்ஸ்லி" என்றார். பின் அவர் நேராக வேர்நானிடம் சென்று அவர் கையில் உள்ள நீண்ட ரைபிளை பிடுங்கி அதன் முனையை எளிதாக மேல் நோக்கி மடக்கினார் ஏதோ அது ரப்பரில் செய்தது போல அதை கையாண்டார்.

பின்னர் அவர் ஹாரியின் முன்னால் திரும்பி, "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹாரி", என்றார். உனக்காக ஒன்று கொண்டு வந்துள்ளேன் என்று கூறி தன் கருப்பு மேலங்கியில் உள்ள பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை ஹாரியிடம் கொடுத்தார். அதனுள்ளே பிறந்த நாள் வாழத்துக்கள் ஹாரி என்று பச்சை நிறத்தில் எழுதிய பெரிய சாக்லட் கேக் இருந்தது.

ஹாரி அவரை நிமிர்ந்து பார்த்தார். அவன் நன்றி தெரிவிக்க முற்பட்டான் ஆனால் அவன் வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை . அதன் பின் அவன் அவரை நோக்கி " யார் நீ " என்று கிட்டான் .

அவர் சிரித்து கொண்டு, "நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை . என்பெயர் ரூபியஸ் ஹாகிரிட் , ரகசியங்களின் பாதுகாவலர் மற்றும் ஹாக்வாட்ஸ்-ன் காவலர்", என்று கூறி தன்னுடைய நீண்ட கையை கைகுலுக்க நீட்டினார். பின்னர் ஹாரி கையை பிடித்து அவன் முழு கையும் கழண்டு விழுமாறு குலுக்கினார்.

" ம்ம் டீ என்னாச்சு, நானாக இருந்தாள் இவ்வளவு பெரிய உருவத்திற்கு மறுக்காமல் டீ கொண்டு வந்து இருப்பேன், என்றார் ஹாகிரிட்.

பின்னர் அவர் காலியாக இருந்த நெருப்பு வைக்கும்[Fire Place] இடத்தை நோக்கி சென்றார். மற்றவர்களால் அவர் அங்கு என்ன செய்கிறார் என்று பார்க்க முடியவில்லை. பிறகு அவர் திரும்பி வந்து அமர்ந்த போது குளிர் காய நெருப்பு வைக்கும் இடத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அது அந்த முழு அறைக்கும் வெளிச்சத்தையும் கதகதப்பையும் கொண்டு வந்தது.

பின்னர் அவர் உக்கார்ந்து தன்னுடைய மேலங்கி பாக்கெட்டில் இருந்து ஒரு காப்பர் பாத்திரம், கசங்கிய நிலையில் இருந்த ஒரு பழ கேக் பாக்கெட், ஒரு உலோக கரண்டி, டீ போடும் பாத்திரம், மற்றும் ஒரு ஆம்பல் திரவ பாட்டிலையும் எடுத்தார். அதன் மூலம் அவரே டீ தயாரிக்க ஆரம்பித்தார். சிரித்து நேரத்தில் அந்த அறை முழுவதும் அந்த கேக் மற்றும் டீ மணத்தால் நிறைந்தது. அந்த கேக்கின் ஒரு பகுதியை எடுத்து டட்லியிடம் கொடுக்க முயன்றார், ஹாகிரிட்.

அதற்க்கு வெர்னான், டட்லி அவர் குடுப்பதை எதையும் வாங்காதே, என்றார். ஆமாம் அவன் இதற்க்கு மேல் பெருக்க தேவையில்லை என்றார் ஹாகிரிட்.

பின்னர் ஹாரியிடம் அந்த கேக்கை கொடுத்தார். ஹாரி மிக பசியில் இருந்ததால் அதை வாங்கி கொண்டான். பின்னர், அவன் "மன்னிக்கவும், ஆனால் உங்களை இன்னமும் யாரென்று தெரிய வில்லை" என்றான் ஹாரி.

அவர் பின்னர், டீயை குடித்து விட்டு , "என்னை ஹாக்ரிட் என்று நீ அழைக்கலாம், நான் ஏற்கனவே கூறிய மாதிரி, நான் ஹாக்வாட்ஸ்-ன் ரகசியங்களின் பாதுகாவலன், ம்ம் உனக்கு ஹாக்வாட்ஸ் பற்றி தெரிந்து இருக்குமே", என்றார்.

"தெரியாது", என்றான் ஹாரி.

ஹாகிரிட் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

"மன்னிக்கவும் ", என்றான் ஹாரி.

பின்னர் டர்ஸ்லி நோக்கி முறைத்து பார்த்தார். " நீ எதற்கு மன்னிப்பு கேக்கிறாய் ஹாரி அதை இவர்கள் கேக்க வேண்டும்", என்றார். பின்னர்,"ஹாரி, நீ கடிதங்களை பெற வில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் ஹாக்வாட்ஸ் பத்தி தெரியாமல் இருப்பாய் என்று எனக்கு தெரியாது, உன்னோடைய பெற்றோர்கள் வேறெங்கு அதை எல்லாம் கற்று கொண்டு இருப்பார்கள் என்று உனக்கு தோன்றவில்லையா?".

"எதை எல்லாம்?", என்றான் ஹாரி.

[தொடரும் - அத்தியாயம் 4]

No comments:

Post a Comment

Visitors