Sunday, January 31, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

அத்தியாயம் - 2: மாயகண்ணாடி



Mrs.டர்ஸ்லி கண் விழித்து ஹாரி பாட்டரை முன் வாசலில் பார்த்து பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன, ஆனால் அவர்கள் இருந்த privet drive மாறாமல் அப்படியே இருந்தது. அந்த அதிகாலையில் சூரியன் உதித்து அதன் ஒளிகிரகணங்கள் அந்த வீட்டின் முன் அறையில் விழுந்தது. அந்த முன் அறை இன்னமும் மாறாமல் இருந்தது. ஆனால் அந்த சுவரில் உள்ள புகைப்படங்கள் உருண்டோடிய பத்து வருடங்களை நினைவு படுத்தி கொண்டு இருந்தது. பூசணி தலையில் தொப்பி வைத்தது போல இருந்த படம் அந்த சுவர் முழுவதும நிறைய இருந்தது. டர்ஸ்லி அவர்களின் குழந்தை டட்லி வளர்ந்து இருந்தான். அவன் சைக்கிள் ஓட்டுவது போலவும், தன் தந்தையிடம் கம்ப்யூட்டர் கற்று கொள்வது போலவும் மற்றும் தன் தாயுடன் இருக்கும் புகைப்படங்களும் நிறைய இருந்தது. ஆனால் அந்த வீட்டில் ஹாரி ஒருவன் இருப்பதிற்கான எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை.


ஆனால் ஹாரி பாட்டர் அந்த வீட்டில் தான் இருந்தான். அவன் சித்தி அவனை கத்தி எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தான்.


ஹாரி, எழுந்திரு.. என்று கத்தினாள் அவன் சித்தி.

அவள் சித்தி கிச்சனுக்கு சென்று ஏதோ ஒன்றை வறுக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவன் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு தான் கண்ட கனவை எண்ணினான். அது மிக்கவும் அருமையாக இருந்தது. அதில் பறக்கும் மோட்டர் சைக்கிள் இருந்தது. இந்த கனவை பல தடவை கண்டது போல இருந்தது அவனுக்கு.

மீண்டும் அவன் சித்தி வந்து, அவன் கதவை தட்டி, "இன்னுமா எழுந்திரிக்கவில்லை", என்று கத்தினாள். "இதோ", என்றான் ஹாரி.

இன்று டட்லி பிறந்த நாள். இன்று அனைத்துமே மிக சரியாக இருக்க வேண்டும், என்றாள். ம்.. சீக்கிரம் வந்து அடுப்பில் உள்ள ரொட்டி துண்டை கவனி என்றாள். ஹாரி எழுந்து தன்னுடைய சாக்ஸ்சை தேடினான். படுக்கைக்கு அடியில் இருந்த தன் சாக்ஸ்சை எடுத்து அதில் ஒன்றில் இருந்த சிலந்தியை தூக்கி எறிந்து விட்டு, பிறகு அதை தன் காலில் மாட்டினான். அந்த சிறிய ஸ்டோர் ரூமில் நிறைய சிலந்திகள் இருந்தாள் அவனுக்கு சிலந்தி பழகிவிட்டது.

அவன் கிச்சனுக்கு சென்று பார்த்த போது, ஒரு மேசை முழுவதும் டட்லிக்கு பிறந்த நாள் பரிசுகள் நிறைந்து இருந்தது. டட்லிக்கு பித்த விளையாட்டு ஹாரியை அடிப்பது தான். ஹாரி மிகவும் ஒளியாக இருந்தான். டட்லி ஹாரியை போல நான்கு மடங்கு இருந்தான். ஹாரிக்கு உடுதுவதேல்லாம் டட்லியின் பழைய துணிகளே. அவனுக்கு அவனிடம் பிடாத ஒரே விஷயம் அவன் நெற்றியில் இருந்த மின்னல் கேற்று போன்ற தழும்பு தான். அவன் பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்ததாக அவன் சித்தி கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அவன் சித்தப்பா கிச்சனுக்கு வந்து இவனை பார்த்து தலை வரவில்லை. போய் தலை வாறி கொண்டு வா, என்றார். அவர் வாரம் ஒரு முறை ஹாரியை பார்த்து இவனுக்கு முடி வேட வேண்டாம் என்று கூறுவார். ஹாரி முடி அதிக வளர்ச்சி கொண்டு இருந்தனால் வாரம் ஒரு முறை ஹாரி முடி வெட்ட வேண்டியதாயிற்று.

டட்லி அந்த அறைக்கு வந்து தனுடைய பரிசுகளை என்ன ஆரம்பித்தான். "முப்பத்தி ஆறு"... . இது போன வருசத்தை விட ரெண்டு குறைவு என்று கத்தினான் தன் தாயை நோக்கி.

அவளும், நாம் வெளியே செல்லும் போது இன்னும் ஒரு 3 பரிசு வாங்கி கொள்ளலாம் என்றாள். அவர்கள் அனைவரும் ஒரு மிருக காட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஹாரியை இதுவரை அவர்கள் வெளியே எங்கும் அழைத்து சென்றதே இல்லை. எங்காவது அவர்கள் வெளியே சென்றால் இவனை பக்கத்துக்கு வீட்டில் உள்ள வயதான ஒரு அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு செல்வார்கள். ஆனால் இப்போது அவள் காலை உடைத்து கொண்டு மருத்தவமனையில் இருப்பதனால், இவர்கள் இவனயும் அவர்களோடு மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

இவனை அழைத்து சென்று காரிலே விட்டுவிட்டு போகலாம், என்றாள் அவன் சித்தி. ஆனால், "கார் புதுசு. இவன் காரில் தனியாக இருப்பதா? என்றார் டர்ஸ்லி. பின்னர் ஹாரியை பார்த்து, "உன்னை எச்சரிக்கிறேன்... அங்கு வந்து எதாவது பண்ணினே, அந்த ஸ்டோர் ரூம்ல தான் கிறிஸ்துமஸ் வரைக்கும் இருக்கணும் ", என்றார்.

நான் ஒன்னும் செய்ய மாட்டேன் என்றான் ஹாரி. ஆனால் அவனை அவன் சித்தப்பா நம்ப வில்லை. ஏனெனில், அவனை அடிகடி சில வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்தது.

அவ்வாறு தான் ஒரு நாள் , அவன் சித்தி ஓயாமல் இவனுக்காக முடி வெட்டும் கடைக்கு செல்ல வேண்டிருந்த கோபத்தினால் ஒரு கத்திரிகோளை எடுத்து இவளே அவன் தலை மட்டை ஆகுமாறு வெட்டி விட்டாள். டட்லி ஹாரி தலையை பார்த்து சிரித்தான். ஹாரி அலுத்து கொண்டே அவன் படுக்கைக்கு சென்றான். காலையில் எழுந்து பார்த்தால் அவன் முடி பழைய அளவுக்கு வளர்ந்து இருந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தது. ஆனால் இன்று அவாறு ஒன்றும் நடக்காது என்று அவன் நினைத்தான். அவன் தன் சித்தப்பாவை நோக்கி, "இன்று என் கனவில் பறக்கும் மோட்டர் சைக்கிளை பார்த்தேன்", என்றான். அதற்கு அவர் " மோட்டர் சைக்கிள் பறக்காது", என்று கோபமாக கூறினார்.

எனக்கும் தெரியும். ஆன இது கனவு தான் என்றான். ஆனால் இந்த மாறி பேசுவர்த்கே ஹாரியை அனுமதிக வில்லை. அது கனவாக இருந்தாலும் அல்லது கார்டூனாக இருந்தாலும் இந்த மாதிரியான சித்தனை வந்தாள் அவனும் தன் தங்கை மாதிரி ஆயிடுவனோ, என்று பயந்தனர்.

அது ஒரு சனிக்கிழமை காலை நேரம், மிருககாட்சி சாலை முழுவதும் பலதரப்பட்ட குடும்பங்களினால் நிரந்து இருந்தது. டட்லி ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கினான். ஹாரிக்கு ஒரு விலை குறைந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்தார்கள். அது ஒன்று மிக மோசமாக இல்லை. அது அவனுக்கு பிடித்து தான் இருந்தது.

அவன் வாழ்க்கையிலே மகிழ்ச்சியான காலை பொழுதைகளித்து கொண்டு இருந்தான். அவர்கள் எல்லா இடமும் சுற்றி விட்டு மதியம் அந்த மிருகசலை உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் பாம்பு, பல்லி, ஆமை போன்றவைகள் அடைக்கபட்ட இடத்திற்கு சென்றனர். டட்லிக்கு கோப்ராவை பார்க்க ஆசை. மிக விரைவில் டட்லி அந்த இடத்திலே மிகபெரிய பாம்பை பார்த்தான். அது முழு உடம்பையும் அவர்கள் வந்த காரை இரு முறை சுற்றி, அது நொறுக்கிற அளவுக்கு பெரியது. ஆனால் இப்பொழுது அமைதியாக அசைவற்று இருந்தது.

டட்லி அது வைக்க பட்டிருந்த கண்ணாடி கூண்டின் மேல் மூக்கை வைத்து அழுத்தி அதை பார்த்து கொண்டு இருந்தான். அது நகராமல் இருப்பதை பார்த்து, " ம்ம் இங்கே வா... நகரு " என்று கத்தினான். அவன் தந்தையும் கண்ணாடியை தட்டினார் ஆனால் அது நகராமல் மெதுவாக உஸ் என்று சத்தம மட்டும் போட்டது. இது போர் அடிக்கிறது என்று சொல்லி விட்டு டட்லி நகர்ந்தான்.

ஹாரி கண்ணாடி முன் வந்து நின்று, ஏன் இப்படி இதை கண்ணாடி கூண்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இது இங்கயே செய்து போனாலும் யாரும் கவலை பட மாட்டார்கள். இது நான் இருக்கும் ஸ்டோர் ரூமை விட மோசமான நிலைமை. இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல் எல்லாரும் அதை தட்டி எழுபுவதையே குறிகோளாக கொண்டுள்ளனர், என்றான்.

உடனே, அந்த பாம்பு கண்ணை திறந்தது. அது எழுந்து அவன் முன் கண்ணாடியில் வந்து அவனை பார்த்து கண் சிமிட்டியது. ஹாரியும் அதை நோக்கினான். பின்னர் வேறு யாரும் அவத்தை பார்க்கவில்லை என்று உணர்ந்து கொண்டு அதை நோக்கி தானும் கண் சிமிட்டினான்.

அந்த பாம்பு, அவன் சித்தப்பாவும், டட்லியும் இருக்கும் திசையை தன் தலையால் காட்டி, இந்த மாதிரிதான் எப்போதும் நடக்கும். என்றது.

புரியுது, ரொம்ப தொந்தரவாக தான் இருக்கும், என்றான். அந்த பாம்பும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டியது.

சரி, நீ எங்க இருந்து வந்தே? என்று கேட்டான் ஹாரி. அதற்கு அந்த பாம்பு தன் வாலால் அந்த கண்ணாடி ஓரத்தில் இருந்த ஒரு பலகையை காட்டியது. அதில் BOA CONSTRICTOR[பாம்பின் வகை], பிரேசில் என்று போட்டு இருந்தது.

ஓ, பிரேசிலா... அந்த இடம் எப்படி இருந்தது? என்று கேட்டான், ஹாரி. அதற்கு அந்த பாம்பு மீண்டும் அந்த பலகையை தன் வாலால் தட்டியது. அதில் "இது மிருககாட்சி சாலை ஆரயிச்சிகூடத்தில் பிறந்தது", என்று போட்டு இருந்தது. ஓ, அப்பா நீ பிரேசிலுக்கே போனந்து இல்லையா, என்றான்.

அந்த பாம்பு அதற்கு தலையாட்டிய பொழுது, கதை கிளிக்கும் விதத்தில் டட்லி "அப்பா, அந்த பாம்பை பாருங்கள் என்று ஓடி வந்தான். வந்தவன் ஹாரியை இடுப்பில் குத்தி கீழே தள்ளிவிட்டு, அவன் கண்ணாடி அருக்கில் சென்று பாம்பை பார்த்தான்.

அப்போது என்ன நடந்தது என்று அறிவதற்குள், மிருககாட்சி சாலை முழுவதும் ஒரே அலறல். அந்த பாம்பை அடைத்து வைத்து இருந்த அந்த கண்ணாடி மாயமாய் மறைந்து போனது. பாம்பு, அந்த கூண்டை விடு வெளியே வந்து கொண்டு இருந்தது.

எல்லாரும் வாசலை நோக்கி ஓடி கொண்டு இருந்தார்கள். அந்த பாம்பு, "பிரேசில், இதோ நான் வரேன்", என்றது. பின்னர் ஹாரியை நோக்கி நன்றி என்றது.

யார்க்கும் ஒன்றும் புரியவில்லை எவ்வாறு அந்த கண்ணாடி மாயமாக மறைந்தது என்று. ஹாரியின் சித்தப்பா மட்டும் அவனை முறைத்து பார்த்தார்.

பின்னர் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு சென்றனர். அவன் சித்தப்பா அவனை நோக்கி உனக்கு இன்று சாப்பாடு கிடையாது. உன் அறைக்கு போ என்றார்.

இங்கு அவன் வந்து பத்து வருடம் ஆகிறது. அவன் சித்தி அவனுடைய பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்தனர் என்று கூறியது மட்டுமே அவனுக்கு நினைவில் இருக்கிறது . அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்ற ஞாபகம் கோடா அவனுக்கு இல்லை. அவன் பெற்றோர் புகைப்படம் கூட ஒன்றும் இல்லை. அவனுக்கு ஞாபகம் இருந்த ஒரே விஷயம் ஒரு பச்சை நிற ஒளியை பார்த்த ஞாபகம் அதை நினைக்கும் போது அவன் நெற்றி எரிவது போல இருக்கும் அவனுக்கு. ஆனால் இது கார் விபத்தின் போது நடந்தது என்றாள் பச்சை நிற ஒளி எங்கிருந்து வந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை .

மிக சிறிய வயதில் ஹாரி தன் சித்தியுடன் கடைக்கு சென்ற போது ஒரு ஊதா நிற உடை உடுத்திய ஒருவன் இவனை பார்த்து மரியாதையை செலுத்தியதை இவனால் மறக்க முடியவில்லை . இந்த மாதிரி பல வர்ண உடை உடுதியர்வகள் இவன் வெளியே செலும் போது இவனை பார்த்து மரியாதையை செலுத்தினர். இவன் அவர்கள் அருகில் சென்று பார்க்கலாம் என்று போகும் போது அவர்கள் திடிரென்று மறைந்து விடுவார்கள் . இந்த மாதிரி பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் அவனை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.

பள்ளியிலும் அவன்னுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இந்த தொளதொள உடையும், உடைந்த கண்ணாடியும் அணிந்த ஹாரியை, டட்லி கேங்குக்கு பிடிக்காது , என்று எல்லோருக்கும் தெரியும். யாரும் டட்லி கேங்கை எதிர்க்க விரும்பவில்லை.

[தொடரும்]

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பகுதி -1]

கதை:

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல்

அத்தியாயம் -1: மார்கண்டேயன்:


[குறிப்பு: இந்த மார்கண்டேயன் பதினாறு வயது இளைகுன் அல்ல பச்சிளம் குழந்தை.]

மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் சாதாரண வாழ்க்கையை அந்த Privet Drive எனப்படும் தாவரங்கள் நிரந்த பசும் சூழலில் அமைதியாக வசித்து கொண்டு இருந்தனர். அவர்களக்கு மந்திரம் மற்றும் தந்திரம் போன்ற விசங்களில் நம்பிக்கையை கிடையாது.

மிஸ்டர். டர்ஸ்லி போர் போடும் grunnings[இதன் அர்த்தம் தேரியவில்லை எனக்கு – ground + running இவாறு இருக்கலாம்] நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்[Director]. மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் மிகவும் மெலிதாகவும் மற்றும் அடுத்த வீட்டாரை வேவு பார்க்க தகுந்த குணம் உடையவராக இருந்தார். அவர்களக்கு டட்லி என்ற மகன் இருந்தான். அவர்கள் அவனை தலை மேல் வைத்து கொண்டாடினார்கள்.

டர்ஸ்லி அவர்கள்[மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ்] அவர்களக்கு தேவையான அனைத்தையும் பெற்று இருந்தார்கள். ஆனால் அவர்களிடமும் ஒரு ரகசியம் மறைந்து கிடந்தது. அதை யாரவது கண்டு பிடிதுவிடுவார்களோ என்ற பயமும் அவர்களக்கு இருந்தது . அவர்களக்கு பாட்டரை பற்றியும் அவனது தாயை பற்றியும் யாராவது அறிந்து கொண்டு விடுவார்களோ என்று ஒரே பயம். அவன் தாய் மிஸ்சஸ். பாட்டர் அவர்கள் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்களின் தங்கை என்று அறிந்துகொண்டு விடுவார்களோ என்று பயம் . அவளுடைய தங்கையை அவள் வெகு நாளாக பார்த்ததே இல்லை .

அப்பொழுது யாரும் கவனிக்காத நேரத்தில், இளம்பழுப்பு நிற ஆந்தை ஒன்று அவர்களின் ஜன்னலை கடந்து சென்றது....

காலை 8.30 மணிக்கு, மிஸ்டர். டர்ஸ்லி வீட்டை விட்டு கிளம்பினார். அப்பொழுது அவர் மனைவிக்கு நாள் பிரிவு விடையை தன் முத்தத்தின் மூலம் தெரிவித்து கொண்ட பொழுது, அவர்கள் மகன் டட்லி உணவின் மீது உள்ள கோபத்தினால், அதை தூகிகி எறிந்தான். அவர் தன் காரை எடுத்து கொண்டு privet drive விட்டு வெளியேற தயாரானார் .

அப்பொழது தெருவின் மூலையில் முதல் வித்தியாசமான ஒன்றை கண்டார் – அது பூனை ஒன்று மேப்பை படித்து கொண்டு இருந்தது. ஒரு சில வினாடி , மிஸ்டர். டர்ஸ்லி தான் என்ன கண்டேன் என்று அவர் உணரவில்லை. பின் சுதாரித்து கொண்டு அந்த பூனையை பார்த்தார். அவருக்கு இப்போழ்து மேப் தெரியவில்லை. பூனை மட்டும் privet drive உக்கார்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது . அவர் அந்த பூனையை நோக்க அதுவும் அவரை நோக்கியது. அவர் இது அவருடைய கற்பனை என்று எண்ணி தனுடைய வழக்கமான போர் போடும் தொழிலை நினைகலனார் .

ஆனால் அவர் நகரத்தை சென்றைடைந்த போது , அவரது கவனத்தை திசை திருப்பும் நிகழ்சிகள் பல நடந்தது . பலரும் மிக வித்தியாசாமான வர்ணகளில் உடையணித்து இருந்தார்கள் . என்ன இது முட்டாள்தனமான பேஷன் என்று எண்ணினார் . சில வயதானவர்களும் லைட் green உடை உடுத்தி கொண்டு ஏதோ ஒரு விசயத்தை மிக்கவும் உற்சாகமாக முனுமுனுத்து கொண்டு இருந்தார்கள் . உடனே அவர் நினைத்தார் , ஏதோ ஒரு நன்கொடைக்காக தான் இவர்கள் எல்லாம் இவ்வாறு உடை உடுத்தி கொண்டு இருக்கிர்கள் என்று நினைத்தார் . அதன் பிறகு அவர் மனம் முழுவதும் போர் போடுவது மட்டுமே நினைவில் இருந்தது .

மிஸ்டர்.டர்ஸ்லி எப்போல்தும் ஒன்பதாவது மாடியில் அமர்ந்து வேலை செய்வார். பகலில் வித்தியாசமாக ஆந்தை ஒன்று உலா வருவதை அவர் பார்க்க விட்டாலும் . மற்ற அனைவைரும் பார்த்து வியந்தார்கள் . இவர் எப்போல்தும் போல சில பேரை வேலை செய்ய சத்தம போட்டு விட்டு மற்றும் சில phone call செய்து முடிக்க மதிய உணவு நேரம் நெருங்கியது .

அவர் பேக்கரி சென்று மதிய உணவு பெற செல்லும் வரை அவர் வேறு எதுவும் வித்தியாசமாக பார்க்கவில்லை.

அப்பொழுது சில வர்ண உடை அணிந்தவர்கள் அவரை கடக்கும் வரை இதை பற்றி முழுவதும் அவர் மறந்து இருந்தார். அவர்கள் கையில் நன்கொடை வசூலிக்கும் உண்டியல் இல்லாததை கண்டு வியந்தார். அவர்கள் உற்சாகமாக, " பாட்டர் பரம்பரை தான், அவன் பையன் ஹாரி மூலம் தான் இவ்வாறு நடந்தது" என்று தெரிவித்தார்கள். இவர் ஏதோ சொல்ல வாய் எடுத்து பின்னர் அமைதி ஆனார்.

திரும்ப தன் இருக்கைக்கு வந்து, தன் வீட்டு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இதை தெரிவிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்க்கு தெரியும் தன் மனைவி தன் தங்கை பெயர் தெரிவித்தால் எவ்வாறு மன வருத்தம் அடைவாள் என்று. அதுவும் இல்லாமல் பாட்டர் என்று வேறு யாராவுது இருக்கலாம். மற்றும் அவர்களது மகனின் பெயர் ஹாரி என்பதும் அவருக்கு மிக சரியாக தெரியாது. அது ஹார்வி அல்லது ஹாரால்டு ஆக இருக்கலாம் தான் தான் தவறாக எண்ணுவதாக நினைத்தார்.

தான் தன் தொழில் போரில் தன் மனம் செலுத்த முடியாமல் அவர் 5 மணிக்கு கிளம்பும் போது வயதான வர்ண உடை உடை உடிதிய ஒருவர் அவரை கட்டி தழுவி "உங்களக்கு தெரியுமா பெயர்-உச்சரிக்க-கூடாதவன் மறைந்து விட்டான். அதனால் சாமானியன் ஆன நீ கூட கொண்டாட வேண்டும்" . தன்னை சாமானியன் என்று அழைத்ததை அவரளால் ஏற்று கொள்ள முடிய வில்லை.

தன் காரை எடுத்துக் கொண்டு privet drive நுழைந்த பொழுது அவர் காலையில் கண்ட பூனை அதே இடத்தில் உக்கார்ந்து கொண்டு இவரை பார்த்ததை இவர்லால் ஜிரனிக்க முடியவில்லை. சூ என்று அந்த பூனையை விரட்டினார். அது அவரை முறைத்து பார்த்தது.

அதை மறந்து விட்டு, வீட்டுக்கு சென்று அமைதியாக இரவு உணவை முடித்து விட்டு தன் மனைவியிடம் எதுவும் தெரிவிக்க கூடாது என்று நினைத்தார். பின்னர், இரவு செய்தி போட்ட பொழுது, பறவை நடமாட்டம் இன்று பகலில் வித்தியாசமாக இருந்ததை பற்றி ஒரு சிறப்பு செய்தி பட்டு இருந்தார்கள். ஆந்தை பகலில் பறக்கிறது. அது தூங்கும் பழக்கத்தை மாற்றி விட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

தன்னுடைய நாற்காலியில் மிஸ்டர்.டர்ஸ்லி உறைந்து இருந்தார், பின்வருமாறு எண்ணி, பிரிட்டன் முழுவதும் நட்சத்திரம் விழுதுவது தெரிந்ததா? பகலில் ஆந்தை லண்டன் முழுவதும் உலா வந்ததா? மற்றும் வர்ண உடை அணிந்தவர்களின் பாட்டரை பற்றிய முனுமுனுப்பு?

பின் தன் மனைவியை நோக்கி அவர், உன் தங்கையிடம் நீ பேசினாயா? அவள் எவ்வாறு இருக்கிறாள் என்று விசாரித்தார். இல்லை எதுக்கு கேகிறேங்க என்று விசாரித்தால் அவள். டிவி செய்தி வித்தியாசமாக உள்ளது. ஆந்தை பகலில் பரந்துனு சொல்றாங்க ஆதன் கேட்டேன் அவங்க எப்படி இருக்காங்கனு...என்று உரைத்தார்.

அதனால? என்றால் அவர் மனைவி.

அவங்க மக்கள் தான் இதுக்கு காரணமோ??? என்றார். பாட்டர் பெயரை கேட்டதை சொல்ல அவரூக்கு துணிச்சல் இல்லை. அதனால், அவர்கள் பையனும் நம் மகன் வயது இருப்பன் அல்லவே என்று கேட்டார்.

அவளும், அவ்வாறு தான் இருக்கும் என்றும் தெரிவித்தாள்.

அவன் பெயர் என்ன? ஹோவர்ட் தானே? என்றார்.....

இல்லை, ஹாரி என்றால் அவள்.

உள்ளம் படபடக்க ஆமாம் என்றார் அவர், ஹாரி பெயரை இன்று மதியம் கேட்ட அதிர்சியில்.

அவர் மனைவி உறங்கி விட்டாள். இவர்க்கு குழப்பத்தினால் உறக்கம் வரவில்லை. பின்னர் வெகு நேரம் களைத்து அவர் உரின்கினார். ஆனால் அந்த பூனை இன்னும் உறங்கவோ அல்லது வேறு செல்லவோ இல்லை. நள்ளிரவிற்கு பிறகு தான் அந்த பூனை, பர்ப்பிள் நிற உடை உடுத்தி, வெள்ளி நிறத்தில் உயரமான தாடியும், முடியும் வைத்த ஆல்பஸ் டம்பில்டோர் பார்த்து நகர்ந்தது.

டம்பில்டோர், தான் வரவேற்க படமுடியாத இடத்தில் தான் இருப்பதை உணர்ந்து கொள்ளலமலும், தன்னை ஒருவர் கவனித்து கொண்டு இருப்பதை அரிது கொள்ளாமலும் இருந்தார். பின்னர் பூனையை நோக்கியவுடன் " ஆ, நான் உங்களை கவனித்து இருக்க வேண்டும்" என்றார்.

டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அதை பன்னிரண்டு முறை திறந்து முடியதன் மூலம் அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் மிக்க சன்னமான வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். இப்போது டர்ஸ்லி யாரவது ஜன்னல் வழியாக பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு இருள் கூடி இருந்தது.

டம்பில்டோர், பூனை இருந்த சுவர் அருகே பார்க்காமல், " வாருங்கள், புரொபசர். மெக்கொனல் உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது" என்றார். அவர் அந்த சுவற்றை நோக்கிய பொழுது அங்கு பூனைக்கு பதிலாக ஒரு பெண்மணி பச்சை நிற உடை உடுத்தி, பூனையின் கண் வளையம் மாதிரி கண்ணாடி அணிந்து இருந்தாள்.

நான் தான் என்பதை எவ்வாறு கண்டுகொண்டிர்கள் என்று கேட்டால் அவள். எந்த ஒரு பூனையும் இவ்வளவு உறுதியாக உட்க்கர்ந்திராது என்றார் டம்பில்டோர்.

காலை முதல் உக்கார்ந்து இருந்தாள் அவ்வாறு தான் இருக்கும் என்றாள். இந்த சிறப்பான நாளை கொண்டலாமல் இங்கு என்ன பண்ணி கொண்டு இருக்கிர்கள் என்றார் அவர்.

ஆமாம், சாமானியர்களும் இதை அறிந்து கொண்டார்கள். ஏதோ விசித்திரமாக நடந்தது என்று டிவி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டு உள்ளது என்றாள் மெக்கொனல்.

அவர்களை குறை சொல்ல முடியாது. 11 வருடத்திற்கு பிறகு நமக்கு கொண்டாட ஒரு தருணம் கிடைத்து உள்ளது என்றார் .

மெக்கொனல் கேட்டாள், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் விட்டானாமே. அப்படியா டம்பில்டோர்? என்று கேட்டாள்.

அவரும் அவ்வாறு தான் தோன்றுகிறது என்றார். அதற்கு மிகவும் நன்றி கடன்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு புரபெசர்.மெக்கொனல், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் இருந்தாலும்....... என்றாள்.

அந்த சமயத்தில் டம்பில்டோர், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் என்று சொல்வதை விட வால்டர்மோர்ட் என்று சொல்ல வேண்டும் என்றார். அந்த பெயரலில் உள்ள பயத்தை போக்க வலியுறித்தினார்.

மெக்கொனல் அவர்களும் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் நிகரான சக்தி உங்களிடமும் உள்ளது என்றாள். ஆனல் நீங்கள் கருப்பு மந்திரங்களை நீங்கள் உபயோகிபதில்லை என்றாள்.

வால்டர்மோர்ட் காட்றிக் ஹாலோவ் சென்று ஜேம்ஸ் மற்றும் லில்லி பாட்டரை [ஹாரி பாட்டரின் தந்தை மற்றும் தாய்] கொன்று பின்னர், ஹாரி பாட்டரை கொள்ள முயற்சி செய்த போது அவனால் இந்த பச்சிளம் குழந்தையை கொள்ள முடியவில்லை யாருக்கும் என் என்று தெரியவில்லை. இந்த முயற்சியில் கருப்பு மந்திர கடவுள் அழிந்தான் என்று அறியபடுகிறோமே? அது உண்மையா? என்று கேட்டாள்.

அது உண்மை தான் என்ற முறையில் அவர் தலை அசைத்தார்.

இத்தனை பேரை கொன்ற அவனால் சிறு குழந்தையை கொள்ள முடியவில்லையா? ஹாரி எவ்வாறு உயிர் பிழைத்தான்? என்றாள். அதை யூகிக்க முடியுமே தவிர கணிக்க முடியாது என்றார் டம்பில்டோர்.

இங்கு எதற்காக தாங்கள் வந்துல்றீர்கள் என்றாள் மெக்கொனல். அதற்கு ஹாரியை அவன் மாமா, அத்தையிடம் ஒப்படைக்க வந்துள்ளேன் என்றார். அவர்கள் தான் அவனின் மிக நெருங்கிய உறவினர்கள் இங்கு வளர்து தான் அவனக்கு மிக சரியாக இருக்கும் என்றார்.

புரபெசர்.மெக்கொனல், இதற்கு ஒத்து கொள்ள முடிய வில்லை. இவளவு பெரிய, புகழ் வாய்ந்த மந்திரவாதி சாமானியாரிடம் வளர்வதா? இந்த naal பிற்காலத்தில் ஹாரி பாட்டர் நாளாக கூட கொண்டாடலாம் அப்பேற்பட்ட ஒருவன் இந்த சூழ்நிலையிலா வளர்வது? என்று கேட்டாள்.

அவனக்கே தெரியாத ஒன்றை, அவன் அறியாத வயதில் நடந்த ஒன்றை வைத்து மிக புகழுடன் வளர்வதை விட, அவன் புகழை முற்றிலும் அறியாத இடத்தில வளர்வதே சால சிறந்தது என்றார்.

அப்பொழுது ஹாக்ரிட், தான் சீரியஸ் ப்ளாக்கிடம் இரவலாக பெற்ற பறக்கும் மோட்டார் சைக்கிளில் குழந்தை ஹாரியை எடுத்து கொண்டு அங்கு வந்தார். அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து நடந்த நிகழ்ச்சியை டம்பில்டோர் ஒரு கடிதத்தில் எழுதி ஹாரியின் மேல் வைத்தார்.

ஹாரி பாட்டர் குழந்தை நெற்றியில் மின்னல் கீற்று மாதிரியான தழும்பு இந்த வால்டர்மோர்ட் தாக்குதலினால் உருவாகி இருக்கும். இந்த தழும்பின் மூலமாகவே பிற்காலத்தில் ஹாரி பெரும்பலவிறினால் அறிய படுவான்.

ஹாக்ரிட், குழந்தை ஹாரியை பிரிய மனமில்லாமல் கண்ணீரை தொடைத்து கொண்டு புறப்பட, புரபெசர்.மெக்கொனல் அவர்கல்கும் கிளம்பினார்கள்.


டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் பழைய வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். ஹாரியும் தன் கூடையில் உள்ள கடிதத்தை இருக்க பிடித்து கொண்டு உறங்கினான். அவன் உறக்கம், மிஸ்சஸ்.டர்ஸ்லி பால் பாட்டில் எடுக்க வெளிய வரும் பொழுது எழுப்பும் அலறலினால், களையும் என்பதை அறியாமல் உறங்கி கொண்டு இருந்தான்.

[தொடரும்]

Visitors