Sunday, January 31, 2010

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பகுதி -1]

கதை:

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல்

அத்தியாயம் -1: மார்கண்டேயன்:


[குறிப்பு: இந்த மார்கண்டேயன் பதினாறு வயது இளைகுன் அல்ல பச்சிளம் குழந்தை.]

மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் சாதாரண வாழ்க்கையை அந்த Privet Drive எனப்படும் தாவரங்கள் நிரந்த பசும் சூழலில் அமைதியாக வசித்து கொண்டு இருந்தனர். அவர்களக்கு மந்திரம் மற்றும் தந்திரம் போன்ற விசங்களில் நம்பிக்கையை கிடையாது.

மிஸ்டர். டர்ஸ்லி போர் போடும் grunnings[இதன் அர்த்தம் தேரியவில்லை எனக்கு – ground + running இவாறு இருக்கலாம்] நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்[Director]. மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் மிகவும் மெலிதாகவும் மற்றும் அடுத்த வீட்டாரை வேவு பார்க்க தகுந்த குணம் உடையவராக இருந்தார். அவர்களக்கு டட்லி என்ற மகன் இருந்தான். அவர்கள் அவனை தலை மேல் வைத்து கொண்டாடினார்கள்.

டர்ஸ்லி அவர்கள்[மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ்] அவர்களக்கு தேவையான அனைத்தையும் பெற்று இருந்தார்கள். ஆனால் அவர்களிடமும் ஒரு ரகசியம் மறைந்து கிடந்தது. அதை யாரவது கண்டு பிடிதுவிடுவார்களோ என்ற பயமும் அவர்களக்கு இருந்தது . அவர்களக்கு பாட்டரை பற்றியும் அவனது தாயை பற்றியும் யாராவது அறிந்து கொண்டு விடுவார்களோ என்று ஒரே பயம். அவன் தாய் மிஸ்சஸ். பாட்டர் அவர்கள் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்களின் தங்கை என்று அறிந்துகொண்டு விடுவார்களோ என்று பயம் . அவளுடைய தங்கையை அவள் வெகு நாளாக பார்த்ததே இல்லை .

அப்பொழுது யாரும் கவனிக்காத நேரத்தில், இளம்பழுப்பு நிற ஆந்தை ஒன்று அவர்களின் ஜன்னலை கடந்து சென்றது....

காலை 8.30 மணிக்கு, மிஸ்டர். டர்ஸ்லி வீட்டை விட்டு கிளம்பினார். அப்பொழுது அவர் மனைவிக்கு நாள் பிரிவு விடையை தன் முத்தத்தின் மூலம் தெரிவித்து கொண்ட பொழுது, அவர்கள் மகன் டட்லி உணவின் மீது உள்ள கோபத்தினால், அதை தூகிகி எறிந்தான். அவர் தன் காரை எடுத்து கொண்டு privet drive விட்டு வெளியேற தயாரானார் .

அப்பொழது தெருவின் மூலையில் முதல் வித்தியாசமான ஒன்றை கண்டார் – அது பூனை ஒன்று மேப்பை படித்து கொண்டு இருந்தது. ஒரு சில வினாடி , மிஸ்டர். டர்ஸ்லி தான் என்ன கண்டேன் என்று அவர் உணரவில்லை. பின் சுதாரித்து கொண்டு அந்த பூனையை பார்த்தார். அவருக்கு இப்போழ்து மேப் தெரியவில்லை. பூனை மட்டும் privet drive உக்கார்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது . அவர் அந்த பூனையை நோக்க அதுவும் அவரை நோக்கியது. அவர் இது அவருடைய கற்பனை என்று எண்ணி தனுடைய வழக்கமான போர் போடும் தொழிலை நினைகலனார் .

ஆனால் அவர் நகரத்தை சென்றைடைந்த போது , அவரது கவனத்தை திசை திருப்பும் நிகழ்சிகள் பல நடந்தது . பலரும் மிக வித்தியாசாமான வர்ணகளில் உடையணித்து இருந்தார்கள் . என்ன இது முட்டாள்தனமான பேஷன் என்று எண்ணினார் . சில வயதானவர்களும் லைட் green உடை உடுத்தி கொண்டு ஏதோ ஒரு விசயத்தை மிக்கவும் உற்சாகமாக முனுமுனுத்து கொண்டு இருந்தார்கள் . உடனே அவர் நினைத்தார் , ஏதோ ஒரு நன்கொடைக்காக தான் இவர்கள் எல்லாம் இவ்வாறு உடை உடுத்தி கொண்டு இருக்கிர்கள் என்று நினைத்தார் . அதன் பிறகு அவர் மனம் முழுவதும் போர் போடுவது மட்டுமே நினைவில் இருந்தது .

மிஸ்டர்.டர்ஸ்லி எப்போல்தும் ஒன்பதாவது மாடியில் அமர்ந்து வேலை செய்வார். பகலில் வித்தியாசமாக ஆந்தை ஒன்று உலா வருவதை அவர் பார்க்க விட்டாலும் . மற்ற அனைவைரும் பார்த்து வியந்தார்கள் . இவர் எப்போல்தும் போல சில பேரை வேலை செய்ய சத்தம போட்டு விட்டு மற்றும் சில phone call செய்து முடிக்க மதிய உணவு நேரம் நெருங்கியது .

அவர் பேக்கரி சென்று மதிய உணவு பெற செல்லும் வரை அவர் வேறு எதுவும் வித்தியாசமாக பார்க்கவில்லை.

அப்பொழுது சில வர்ண உடை அணிந்தவர்கள் அவரை கடக்கும் வரை இதை பற்றி முழுவதும் அவர் மறந்து இருந்தார். அவர்கள் கையில் நன்கொடை வசூலிக்கும் உண்டியல் இல்லாததை கண்டு வியந்தார். அவர்கள் உற்சாகமாக, " பாட்டர் பரம்பரை தான், அவன் பையன் ஹாரி மூலம் தான் இவ்வாறு நடந்தது" என்று தெரிவித்தார்கள். இவர் ஏதோ சொல்ல வாய் எடுத்து பின்னர் அமைதி ஆனார்.

திரும்ப தன் இருக்கைக்கு வந்து, தன் வீட்டு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இதை தெரிவிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்க்கு தெரியும் தன் மனைவி தன் தங்கை பெயர் தெரிவித்தால் எவ்வாறு மன வருத்தம் அடைவாள் என்று. அதுவும் இல்லாமல் பாட்டர் என்று வேறு யாராவுது இருக்கலாம். மற்றும் அவர்களது மகனின் பெயர் ஹாரி என்பதும் அவருக்கு மிக சரியாக தெரியாது. அது ஹார்வி அல்லது ஹாரால்டு ஆக இருக்கலாம் தான் தான் தவறாக எண்ணுவதாக நினைத்தார்.

தான் தன் தொழில் போரில் தன் மனம் செலுத்த முடியாமல் அவர் 5 மணிக்கு கிளம்பும் போது வயதான வர்ண உடை உடை உடிதிய ஒருவர் அவரை கட்டி தழுவி "உங்களக்கு தெரியுமா பெயர்-உச்சரிக்க-கூடாதவன் மறைந்து விட்டான். அதனால் சாமானியன் ஆன நீ கூட கொண்டாட வேண்டும்" . தன்னை சாமானியன் என்று அழைத்ததை அவரளால் ஏற்று கொள்ள முடிய வில்லை.

தன் காரை எடுத்துக் கொண்டு privet drive நுழைந்த பொழுது அவர் காலையில் கண்ட பூனை அதே இடத்தில் உக்கார்ந்து கொண்டு இவரை பார்த்ததை இவர்லால் ஜிரனிக்க முடியவில்லை. சூ என்று அந்த பூனையை விரட்டினார். அது அவரை முறைத்து பார்த்தது.

அதை மறந்து விட்டு, வீட்டுக்கு சென்று அமைதியாக இரவு உணவை முடித்து விட்டு தன் மனைவியிடம் எதுவும் தெரிவிக்க கூடாது என்று நினைத்தார். பின்னர், இரவு செய்தி போட்ட பொழுது, பறவை நடமாட்டம் இன்று பகலில் வித்தியாசமாக இருந்ததை பற்றி ஒரு சிறப்பு செய்தி பட்டு இருந்தார்கள். ஆந்தை பகலில் பறக்கிறது. அது தூங்கும் பழக்கத்தை மாற்றி விட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

தன்னுடைய நாற்காலியில் மிஸ்டர்.டர்ஸ்லி உறைந்து இருந்தார், பின்வருமாறு எண்ணி, பிரிட்டன் முழுவதும் நட்சத்திரம் விழுதுவது தெரிந்ததா? பகலில் ஆந்தை லண்டன் முழுவதும் உலா வந்ததா? மற்றும் வர்ண உடை அணிந்தவர்களின் பாட்டரை பற்றிய முனுமுனுப்பு?

பின் தன் மனைவியை நோக்கி அவர், உன் தங்கையிடம் நீ பேசினாயா? அவள் எவ்வாறு இருக்கிறாள் என்று விசாரித்தார். இல்லை எதுக்கு கேகிறேங்க என்று விசாரித்தால் அவள். டிவி செய்தி வித்தியாசமாக உள்ளது. ஆந்தை பகலில் பரந்துனு சொல்றாங்க ஆதன் கேட்டேன் அவங்க எப்படி இருக்காங்கனு...என்று உரைத்தார்.

அதனால? என்றால் அவர் மனைவி.

அவங்க மக்கள் தான் இதுக்கு காரணமோ??? என்றார். பாட்டர் பெயரை கேட்டதை சொல்ல அவரூக்கு துணிச்சல் இல்லை. அதனால், அவர்கள் பையனும் நம் மகன் வயது இருப்பன் அல்லவே என்று கேட்டார்.

அவளும், அவ்வாறு தான் இருக்கும் என்றும் தெரிவித்தாள்.

அவன் பெயர் என்ன? ஹோவர்ட் தானே? என்றார்.....

இல்லை, ஹாரி என்றால் அவள்.

உள்ளம் படபடக்க ஆமாம் என்றார் அவர், ஹாரி பெயரை இன்று மதியம் கேட்ட அதிர்சியில்.

அவர் மனைவி உறங்கி விட்டாள். இவர்க்கு குழப்பத்தினால் உறக்கம் வரவில்லை. பின்னர் வெகு நேரம் களைத்து அவர் உரின்கினார். ஆனால் அந்த பூனை இன்னும் உறங்கவோ அல்லது வேறு செல்லவோ இல்லை. நள்ளிரவிற்கு பிறகு தான் அந்த பூனை, பர்ப்பிள் நிற உடை உடுத்தி, வெள்ளி நிறத்தில் உயரமான தாடியும், முடியும் வைத்த ஆல்பஸ் டம்பில்டோர் பார்த்து நகர்ந்தது.

டம்பில்டோர், தான் வரவேற்க படமுடியாத இடத்தில் தான் இருப்பதை உணர்ந்து கொள்ளலமலும், தன்னை ஒருவர் கவனித்து கொண்டு இருப்பதை அரிது கொள்ளாமலும் இருந்தார். பின்னர் பூனையை நோக்கியவுடன் " ஆ, நான் உங்களை கவனித்து இருக்க வேண்டும்" என்றார்.

டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அதை பன்னிரண்டு முறை திறந்து முடியதன் மூலம் அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் மிக்க சன்னமான வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். இப்போது டர்ஸ்லி யாரவது ஜன்னல் வழியாக பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு இருள் கூடி இருந்தது.

டம்பில்டோர், பூனை இருந்த சுவர் அருகே பார்க்காமல், " வாருங்கள், புரொபசர். மெக்கொனல் உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது" என்றார். அவர் அந்த சுவற்றை நோக்கிய பொழுது அங்கு பூனைக்கு பதிலாக ஒரு பெண்மணி பச்சை நிற உடை உடுத்தி, பூனையின் கண் வளையம் மாதிரி கண்ணாடி அணிந்து இருந்தாள்.

நான் தான் என்பதை எவ்வாறு கண்டுகொண்டிர்கள் என்று கேட்டால் அவள். எந்த ஒரு பூனையும் இவ்வளவு உறுதியாக உட்க்கர்ந்திராது என்றார் டம்பில்டோர்.

காலை முதல் உக்கார்ந்து இருந்தாள் அவ்வாறு தான் இருக்கும் என்றாள். இந்த சிறப்பான நாளை கொண்டலாமல் இங்கு என்ன பண்ணி கொண்டு இருக்கிர்கள் என்றார் அவர்.

ஆமாம், சாமானியர்களும் இதை அறிந்து கொண்டார்கள். ஏதோ விசித்திரமாக நடந்தது என்று டிவி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டு உள்ளது என்றாள் மெக்கொனல்.

அவர்களை குறை சொல்ல முடியாது. 11 வருடத்திற்கு பிறகு நமக்கு கொண்டாட ஒரு தருணம் கிடைத்து உள்ளது என்றார் .

மெக்கொனல் கேட்டாள், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் விட்டானாமே. அப்படியா டம்பில்டோர்? என்று கேட்டாள்.

அவரும் அவ்வாறு தான் தோன்றுகிறது என்றார். அதற்கு மிகவும் நன்றி கடன்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு புரபெசர்.மெக்கொனல், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் இருந்தாலும்....... என்றாள்.

அந்த சமயத்தில் டம்பில்டோர், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் என்று சொல்வதை விட வால்டர்மோர்ட் என்று சொல்ல வேண்டும் என்றார். அந்த பெயரலில் உள்ள பயத்தை போக்க வலியுறித்தினார்.

மெக்கொனல் அவர்களும் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் நிகரான சக்தி உங்களிடமும் உள்ளது என்றாள். ஆனல் நீங்கள் கருப்பு மந்திரங்களை நீங்கள் உபயோகிபதில்லை என்றாள்.

வால்டர்மோர்ட் காட்றிக் ஹாலோவ் சென்று ஜேம்ஸ் மற்றும் லில்லி பாட்டரை [ஹாரி பாட்டரின் தந்தை மற்றும் தாய்] கொன்று பின்னர், ஹாரி பாட்டரை கொள்ள முயற்சி செய்த போது அவனால் இந்த பச்சிளம் குழந்தையை கொள்ள முடியவில்லை யாருக்கும் என் என்று தெரியவில்லை. இந்த முயற்சியில் கருப்பு மந்திர கடவுள் அழிந்தான் என்று அறியபடுகிறோமே? அது உண்மையா? என்று கேட்டாள்.

அது உண்மை தான் என்ற முறையில் அவர் தலை அசைத்தார்.

இத்தனை பேரை கொன்ற அவனால் சிறு குழந்தையை கொள்ள முடியவில்லையா? ஹாரி எவ்வாறு உயிர் பிழைத்தான்? என்றாள். அதை யூகிக்க முடியுமே தவிர கணிக்க முடியாது என்றார் டம்பில்டோர்.

இங்கு எதற்காக தாங்கள் வந்துல்றீர்கள் என்றாள் மெக்கொனல். அதற்கு ஹாரியை அவன் மாமா, அத்தையிடம் ஒப்படைக்க வந்துள்ளேன் என்றார். அவர்கள் தான் அவனின் மிக நெருங்கிய உறவினர்கள் இங்கு வளர்து தான் அவனக்கு மிக சரியாக இருக்கும் என்றார்.

புரபெசர்.மெக்கொனல், இதற்கு ஒத்து கொள்ள முடிய வில்லை. இவளவு பெரிய, புகழ் வாய்ந்த மந்திரவாதி சாமானியாரிடம் வளர்வதா? இந்த naal பிற்காலத்தில் ஹாரி பாட்டர் நாளாக கூட கொண்டாடலாம் அப்பேற்பட்ட ஒருவன் இந்த சூழ்நிலையிலா வளர்வது? என்று கேட்டாள்.

அவனக்கே தெரியாத ஒன்றை, அவன் அறியாத வயதில் நடந்த ஒன்றை வைத்து மிக புகழுடன் வளர்வதை விட, அவன் புகழை முற்றிலும் அறியாத இடத்தில வளர்வதே சால சிறந்தது என்றார்.

அப்பொழுது ஹாக்ரிட், தான் சீரியஸ் ப்ளாக்கிடம் இரவலாக பெற்ற பறக்கும் மோட்டார் சைக்கிளில் குழந்தை ஹாரியை எடுத்து கொண்டு அங்கு வந்தார். அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து நடந்த நிகழ்ச்சியை டம்பில்டோர் ஒரு கடிதத்தில் எழுதி ஹாரியின் மேல் வைத்தார்.

ஹாரி பாட்டர் குழந்தை நெற்றியில் மின்னல் கீற்று மாதிரியான தழும்பு இந்த வால்டர்மோர்ட் தாக்குதலினால் உருவாகி இருக்கும். இந்த தழும்பின் மூலமாகவே பிற்காலத்தில் ஹாரி பெரும்பலவிறினால் அறிய படுவான்.

ஹாக்ரிட், குழந்தை ஹாரியை பிரிய மனமில்லாமல் கண்ணீரை தொடைத்து கொண்டு புறப்பட, புரபெசர்.மெக்கொனல் அவர்கல்கும் கிளம்பினார்கள்.


டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் பழைய வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். ஹாரியும் தன் கூடையில் உள்ள கடிதத்தை இருக்க பிடித்து கொண்டு உறங்கினான். அவன் உறக்கம், மிஸ்சஸ்.டர்ஸ்லி பால் பாட்டில் எடுக்க வெளிய வரும் பொழுது எழுப்பும் அலறலினால், களையும் என்பதை அறியாமல் உறங்கி கொண்டு இருந்தான்.

[தொடரும்]

6 comments:

Visitors